கண்டுபிடித்தேன்! கண்டுபிடித்தேன்!!
மகிழ்ச்சி மிகுதியில்
நானாகவே
பேசினேன்,
பாடினேன்,
சிரித்தேன்,
ஆடைமறந்து ஓடிய
ஆர்க்கிமெடீசைபோல
காதலர்கள்
பருவக்காற்று
வீசத்தொடங்கியதும்
நனைந்தார்கள்
குடைபிடிக்காமலே
காதல்மழையில்
ஒற்றைப்பனை
பிரதி எடுக்கவில்லை
பிரம்மச்சாரியாகவே
நான்
ஏன்?
குளிர்ச்சியில்
மேகத்திற்கு
வியர்த்துக் கொட்டியது -
மழை
கச்சேரி
ஒத்த
அலை வரிசையில்
காதல் -
சங்கீதம்
வேர்.... ஆசை
வேர்விட்ட
புல் தரை
நினைவுக்கு
வருகிறது - அது
மிதிப்படும்போது -
'ஆசையே
துன்பத்திற்குக்
காரணம்' என்று சொன்ன
புத்தரை
பணம் பத்தும் .......?
எட்டுப் போடாமல்
வாங்கிய உரிமம்
பத்துப்போட
வைத்துவிட்டது -
பலத்த அடி
No comments:
Post a Comment