Thursday, December 29, 2016


கண்டுபிடித்தேன்! கண்டுபிடித்தேன்!! 


மகிழ்ச்சி மிகுதியில்
நானாகவே
பேசினேன்,
பாடினேன்,
சிரித்தேன்,
ஆடைமறந்து ஓடிய
ஆர்க்கிமெடீசைபோல

காதலர்கள் 

பருவக்காற்று
வீசத்தொடங்கியதும்
நனைந்தார்கள்
குடைபிடிக்காமலே
காதல்மழையில்

ஒற்றைப்பனை 

பிரதி எடுக்கவில்லை
பிரம்மச்சாரியாகவே
நான்

ஏன்?

குளிர்ச்சியில்
மேகத்திற்கு
வியர்த்துக் கொட்டியது -
மழை


கச்சேரி 

ஒத்த
அலை வரிசையில்
காதல் -
சங்கீதம்


வேர்.... ஆசை 

வேர்விட்ட
புல் தரை
நினைவுக்கு
வருகிறது - அது
மிதிப்படும்போது -
'ஆசையே
துன்பத்திற்குக்
காரணம்' என்று சொன்ன
புத்தரை


பணம் பத்தும் .......?

எட்டுப் போடாமல்
வாங்கிய உரிமம்
பத்துப்போட
வைத்துவிட்டது -
பலத்த அடி 

No comments:

Post a Comment