பக்தி
கூட்டுப்பிரார்த்தனையில்
தனித் தனியாய்
பனித்துளிகள்
கல்வி
அறிவுப் பச்சையம்
எதிரில்
மாணவச்செடிகள்
சட்டம்
சுத்தியலுங்கூட
அணைப்பூட்டை
உடைக்கவில்லை
வயல் முழுக்க
சாவிக்கொத்துகள் !
அலுவலகம்
அதிகாரி
தேங்கிய குட்டைக்குள்
பன்றி
வாழ்க்கை
வயற்காட்டில்
ஒரே உயிரெழுத்து
உழவன்
நம்பிக்கை
படர்கொடியாக நான்!
கனவுப்பூக்கள்
உதிராமல் இருக்க
உதிரிப்பூக்களாய்-உன்
புன்னகையே போதும் !
திருமணம்
பிள்ளைக்குத் தகும்
கலப்புப் பின்னம்
அழகு
சாவதற்காக
அவள் பெற்ற
சாகா வரம் !
ஏக்கம்
ஊற்றிக் கொடுத்துவிட்டு
கனவுகளை வருடிக்கொடுக்கிறாயே
அப்படி என்னதான் இருக்கிறது
இதயக்கோப்பையில் ! ?









