Thursday, October 28, 2010

அதிரடிக் கவிதைகள்


பக்தி

கூச்சல் அதிகம்
கூட்டுப்பிரார்த்தனையில்
தனித் தனியாய்
பனித்துளிகள்


கல்வி 

ஆசிரியச் சூரியனில்
அறிவுப் பச்சையம்
எதிரில்                                    
மாணவச்செடிகள்

சட்டம்

நீதிமன்றச்
சுத்தியலுங்கூட
அணைப்பூட்டை
உடைக்கவில்லை
வயல் முழுக்க
சாவிக்கொத்துகள் !


அலுவலகம்

நகராத கோப்புகளுடன்
அதிகாரி
தேங்கிய குட்டைக்குள்
பன்றி

வாழ்க்கை

வறண்.....ட
வயற்காட்டில்
ஒரே உயிரெழுத்து
உழவன்

நம்பிக்கை

பாரித் தேராக நீ—அதில்
படர்கொடியாக நான்!
கனவுப்பூக்கள்
உதிராமல் இருக்க
உதிரிப்பூக்களாய்-உன்
புன்னகையே போதும் !

திருமணம்

பெற்றோருக்குத் தகாத
பிள்ளைக்குத் தகும்
கலப்புப் பின்னம்

அழகு

நான்
சாவதற்காக
அவள் பெற்ற
சாகா வரம் !

ஏக்கம்

கண்ணீரை
ஊற்றிக் கொடுத்துவிட்டு
கனவுகளை வருடிக்கொடுக்கிறாயே
அப்படி என்னதான் இருக்கிறது
இதயக்கோப்பையில் ! ?

No comments:

Post a Comment